பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அனிதா அமிர்தலிங்கம் நேற்று (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
துஷ்யந்தியின் அன்புத் தாயாரும்,
உமாகாந்தன் இன் அன்பு மாமியாரும்,
வாசுகி, சுதாகரன், சிறிகரன் ஆகியோரின் சகோதரியும்,
செல்வராணி, நடராசா, சுஜாதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.06.2023) திங்கட்கிழமை நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை.
தொலைபேசி இலக்கம் : 077 174 0572
தகவல்: குடும்பத்தினர்